உழைப்பு

உழைப்பு

முள் இல்லாத ரோஜா
கொட்டை இல்லாத திராட்சை
உரித்து எடுத்த பலா சுளை
கஷ்டம் இல்லாத வாழ்க்கை
இவை இல்லாம் வேண்டி விரும்பி கேட்டேன்
கேட்டது கிடைத்தது
நினைத்தது நடந்தது
ஆனால் ………எல்லாமே சலித்தது உடனே
பிறகு புரிந்தது…..
உழைக்காமல் கிடைத்த பொருளும்
பிரச்சனை இல்லா வாழ்வும்
உப்பு இல்லாத உணவு போல என்று !

வ. ரங்கநாயகி

Leave a comment